Monday 12 January 2015

உச்சி போய் காதல் வா !



எப்படி கூறியும் எடுத்துரைக்க  இயலவில்லை;
சுரக்கும் வேதியலின் வெட்ப விருட்சம், 
காதல் இல்லை என !!

ஏடு சேரா எழுத்துக்களின் எண்ணம் 
திசையற்றிருப்பது திண்ணம் எனில்
நீ நீருள் தவளை !!

இவன், இவள், இன்பம், இருப்பு,
கண்டறிய கண் போதும் 
காற்றெதற்கு ??

திளைப்பில் தீ கூட தித்திப்பு.
மனம் பேசும் மென்மொழி, 
மனம் கேளா தேகம்.

இலக்கணமற்ற புணர்ச்சிக்கு,
இடமளிக்க புரிதல் ஏதற்கு ?
அது தமிழ் இல்லை, தீங்கு.

என்னவன், என்னவள் என்கயில்,
நறைமுடி உச்சியின் வாசம் வரின்,
நீ காதலிக்கிறாய் ! :)