Friday 31 October 2014

மஞ்சள் பூ மரத்தடியில்.



 



மழைப்பெய்த மரத்தடியில், 
மனம் நனைக்கும் சிற்றோடை. 
மஞ்சள் நிறப் பறவையொன்று 
     கடலுக்குள் குதித்தது போல், 
மயங்கிக்கிடக்கும் மஞ்சள் பூக்கள். 

கடக்கத்துடிக்கும் என் கால்களை- 
காந்தமாய் கட்டிக்கொண்ட காட்சி.
சிலப் பூக்கள் சிரித்திருக்க, 
    சிலப் பூக்கள் கண்ணீருடன்.
சிலிர்க்க செய்யும் மென்காற்றும்,
சிந்தை விரும்பும் கலவையாய்.

விழிக்குடை மூடாமல் அகல அகல- 
வியப்பிற்க்கு வியாபாரம் பேசும் விந்தை.
துளிகள் நனைக்கையில் இப்பூ- 
துணையாய் இருந்திருக்கக்கூடும் - மரத்திற்கு.

உதிர்வதை உணராமல் இல்லை-மரமும் பூவும்.
உற்றதும், உருவேற்பதும் உடனிருக்கையில், 
உமிழ்ந்துவிட்ட வாடா பூக்களுக்கு, 
உயிர் இருந்திருக்கலாம், இருக்கலாம்! 

Thursday 30 October 2014

திருத்தம் கோரும் தீபாவளி!





ஓசோனில் ஓட்டை ,
ஒன்றுமறியா பறவைக்குஞ்சு, 
ஒழுங்கற்ற சுற்றுச்சூழல், 
ஒருவித மனக்கசப்பு .

உறவினர் ஒன்றுபட;
உறுதியாக்கும் பிணைப்பு பெற;
உள்ளம் திளைத்திருக்க; 
உருவானதொரு பண்டிகை. 

நல்லோர்கள் ஒன்றுபடாமல்,  
நட்சத்திர அம்ச வீடுகளில், 
நச்சு பணமும் பகட்டுமாக, 
நலிந்து விட்ட திருவிழா. 

தீப ஒளி திருநாளை,
தீபாவளி என மருவச்செய்து,
தீ- பாவம் - அழி என்று பொருட்படச்செய்து,
தினரச்செய்கிறோம் நம் தலைமுறையை. 

கைபேசிக்கு தள்ளுபடி; 
கண்கவரும் ஆடைகள்; 
கமகமக்கும் பலகாரம்; 
கட்டுப்பட்டாசு- இவை நம் தீபாவளி. 

சிறு வயிறு சுருங்கி ,
சீற்றத்தின் சிறைதனலில், 
சிதையுண்டும் சினங்கொண்டும் ,
சிற்றார்கள் எத்தனையோ. 

புகைவீச்சு தாளாமல், 
புண்ணாகும் ஐந்தறிவின் ,
புதைக்கப்படும் ஓலங்களை ,
பொருட்படுத்தாத ஆறறிவு. 

அணி வகுக்கும் இயந்திரங்களுக்கு -
அளவில்லாமல் காசோலை எண்ணுகையில், 
அடுத்த வேளைக்கு சில்லறை தேடுபவனை- 
அன்றேனும் எண்ணுங்கள்!

மனம் மகிழ தீபங்கள் ஏற்றி, 
மண்மணத்தை மாசுபடுத்தாது, 
மற்றவருக்கு கொடுத்துதவி ,
நாம் பறக்கவிடும் பணக்கட்டில்- 
ஒரு பங்கேனும் பகிர்ந்தளிப்போம்.

மரணம் கடந்த மகத்துவம், புரியும்!


-நன்றி-


Wednesday 8 October 2014

நடுநிசியில் பறக்கும் மஞ்சள் பட்டம்!




விரிந்து கிடக்கும் வயல் வரப்பு
விடிவதரியாது விழித்திருக்க, 
வான் நோக்கி காற்று கடத்த 
வழிமொழிய வாய்ப்பின்றி உயர உயர.. 

வினை செய்து பெயர் பெற்று, 

வினையெச்சத்தின் எச்சங்களாய்,
வியபூட்டும் பெயரேச்சங்களின் 
வருகைக்கு நாள் பார்த்து- 

காணாது  போன  கடவுச்சொல்லொன்று 

கல்லெறியும் தெரு மனிதன்பால் சிக்கிவிட, 
கடல் வரை பார்க்க முடிந்தும் 
கண்ணற்ற களவு போல்.

மெய்யிநூடே பொய் - அது உயிராகி,

பொய்யினுள் புதைத்த உயிர்மெய்களாய் -
கைக்குட்டை நனைய கண்ணுதிர்த்து 
செய்வதரிந்தும் விம்மி நின்று.. 

ழகரம் உணர்ந்த ஊமையொன்று ;

காதலறிந்த குருட்டு விழியொன்று ;
இசை சுவைத்த கேளா செவியொன்று ;
மூளைக்குள் ஞாலம்- ஞானமில்லை!

காரியமாய் கணித்து விடப்பட்ட இவ்வேளைகளில்,

கண் சொருகும் காரணமாய்  மிதந்து, 
இந்நடுநிசியில் மேலே சென்று, 
ரசனைக்கும் ரசவாதம் பூசி ..

படபடக்கும் மென்மஞ்சள் பட்டம்!!



Tuesday 7 October 2014

Frangipani!


                         


Oh me! A tree, house of a lark.
Proud of my leaf, so unique.
Glad for my garden place,
Peace, warmth and solace.

Sky pours to cleanse;
I look up in gazed sense.
White of the clouds- I want on me,
Splendor like a star- five edge free.
Pink in the baby palm- a touch that eve,
Smell from the dame’s tress, dressed in mauve.
Yellow, gives the bright Sun-fall,
I see- I want it all.

I now bloom in mellow,
With all I fancied for.
On a sensual sepal- show,
A melodious frangipani flower!

A  leaf drips on me,
Fragrance taken so breezy-
To the other side of my window pane,
Sits a little loving lassie.
Writes my birth, in a poetry-
Hints from a dreamy lane.
I proclaim; I knew my whispers,
Last night, in her tiny ears.