Tuesday 18 February 2014

ஏ(ன்)மாற்றம் !!

வானம் பார்த்து வாய் பிளக்க,
கண்ணிமை பட்டுத்தெரிக்கும்  
மழைத்துளி !

புருவம் விரிந்து கையகல
விரலினைத்து  துருத்தி,'பே' எனும் 
நண்பன்!

இலையசய, கண்மூடி முகம் தர
சலனமற்று கடந்தே செல்லும் 
தென்றல்!

இதழ் குவித்து அருகில் வர,
கன்னம் காட்டி- அடி வைக்கும் 
குழந்தை!

சிகை கண்டு சட்டென முன்நோக்க,
சுருங்கசிரிக்கும், இளமை கடந்த 
பெண்!

அதிசயமாய் ஆழ படித்தும் 
மறந்தோ , மறுத்தோ  விடபட்டதொரு 
கேள்வி!

திருவிழா தாவணி தரிசனத்தில் 
முதற்கண் அழகு - ஒன்றுவிட்ட 
தங்கை!

தெரியாமல் செய்ய எண்ணி,
முன்னமே கேட்கப்படும் 
உதவி!

பளிச்சென புன்னகைத்தும்,
புரியாமல் புருவம் குருக்கும்  பால்ய 
சினேகம்!

வாரம் ஒன்றை திட்டமிட்டும்,
'வா' என உரக்கசொல்லும் 
விடுமுறை!

ஏராளமாய் சிருகச்செர்து ,
எண்ணுகையில் பூஜ்யம் குறையும்
உண்டியல்!

என, உயிர்குடி உடல் வளர்பு உலகத்தில்,
இச்சில ஏமாற்றங்கள், சினம் அல்ல-
சிரிக்கத்தான் வைகிறது!!



இனிய நாள்!!